இன்று இந்தியாவில் பெண் கல்விக்கு வித்திட்ட வீரத்தாய்இ மகாத்மா சாவித்ரிபாய் பூலேவின் பிறந்த தினம். இந்த நாளை நான் எப்பொழுதும் ... 1. பெண் ஆசிரியர்கள் தினமாகவும்இ 2. சமத்துவ கல்வி தினமாகவும் 3. இந்தியக்கல்வியின் புரட்சி தினமாகவும் .... என் மாணவர்களிடையே நினைவுறுத்திஇ வரலாற்றைச் சுவடுகளைச் சொல்லிக் கொண்டாடுவது வழக்கம். ஆசிரியர்கள் என்று எடுத்துக்கொண்டால் அதில் ஏறக்குறைய 60 வழ 70 விழுக்காட்டிற்கு மேலாக பெண்கள் தான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இந்தியச் சூழலில் ஒரு ' ஆண்' ஆசிரியராக இருப்பதைவிட ஒரு 'பெண்' ஆசிரியர் இருப்பது மிகுந்த சவாலான ஒன்றாகத் தான் எனக்கு தோன்றுகிறது. அதிகாலையிலேயே எழுந்து வீட்டிலிருக்கும் அனைவருக்கும் காபி போடுவதில் ஆரம்பித்துஇ காலை உணவுஇ மதிய உணவு இரண்டையும் தயாரித்து வைத்துவிட்டு ( சில வீடுகளில் பரிமாறவும் செய்துவிட்டுஇ விளையாட்டு குழந்தை(களை)யும் சாப்பிட வைத்துவிட்டு)....அவசர அவசரமாகஇ சாப்பிட்டும் சாப்பிடாமல்... பள்ளிக்குள் புன்னகையுடன் மாணவர்களை அனைத்தபடி நுழையும் பெண் ஆசிரியர்கள். (இதில் கூட்டுக் குடும்பத்தில் மருமகளென்றால் என்றால் சுத்தம் - அந்த ஆசிரியரின் நிலை) இரவு குடும்பத்தினர் அனைவரும் தூங்கிய பிறகு( குழந்தைகளையும் தூங்க வைத்துவிட்டு அடுத்த நாள் வகுப்பிற்கான தயாரிப்புகளை முடித்து ....பின்னிரவில் தூங்கி ...பின் அதிகாலையில் அவசர அவசரமாக ஓடி வந்து பள்ளி பேருந்திலோஃ பொது பேருந்திலோ ஏறும் பெண் ஆசிரியர்கள் ... குளித்து முடித்த தலைமுடியை உலர்த்தகூட நேரமில்லாமல் பள்ளிக்கு வந்து ளவயகக சழழஅ கயn க்கு அடியில் பள்ளி முதல்வர் சழரனௌ க்கு வருவதற்கு முன் அவசர அவசரமாக உலர்த்தி வகுப்பிற்கு ஓடும் பெண் ஆசிரியர்கள்... குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அவரவர்களுடைய 'அம்மாவின்' மறுவுருவமாக பெண் ஆசிரியர்கள்... இப்படி உழைத்தும் வருட கடைசியில் கொடுக்கப்படும் ஐnஉசநஅநவெ - ல் 100 ரூபாய் குறைந்தால் கூட கணவன் மற்றும் மாமியார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல் முடியாமல் பள்ளி தலைமையிடமும்இ நிர்வாகத்திடமும் தன் பணித்திறமைகளையும்இ pநசகழசஅயnஉந பற்றி பேசி போராடும் பெண் ஆசிரியர்கள். ( இன்றும் யவஅ உயசன கணவனிடம் தான் இருக்கும்இ அவர் கேட்பார் ' இன்னும் ஏன் சம்பளம் போடவில்லை) வீட்டில் கணவனிடம்ஃ குடும்பத்தினரிடமும் வாங்கிய திட்டுகளின்இ அடிகளின் வலி மறைத்து புன்னகையுடன் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள்..... திருமணமாகாத பெண் ஆசிரியரென்றால் மாலை பள்ளிமுடிந்தவுடன் இருட்டுவதற்குள் பஸ் பிடித்து வீட்டிற்கு வந்துவிட வேண்டும். இல்லையென்றால் அக்கம்பக்கத்தினர் பேச்சுகளுக்கு ஆளாக நேரிடும். நிறைய சொல்ல இருக்கிறது... எல்லாவற்றையும் மனதில் கொண்டு அனைத்து பெண் ஆசிரியர்களையும் கை கூப்பி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். _________________________________________ சாவித்ரிபாய் பூலே பள்ளிக்கு செல்லும் வழியில் அவர் மீது கற்களையும்இ சேற்றையும்இ சாணத்தையும் அள்ளி வீசுவார்களாம். சாவித்ரி இதற்காகவே இன்னொரு உடையை ( பள்ளி சென்றதும் மாற்றிக்கொளவதற்கான மாற்று உடையொன்றை) எப்பொழுதும் உடன் வைத்திருப்பாராம். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். இந்தியாவில் முதன் முதலில் பெண்களுக்கான பள்ளியை நடத்தியவர். . அனைவருக்கும் பெண் ஆசிரியர் தின வாழ்த்துக்களும்இ வணக்கங்களும். குறிப்பு: 'எல்லா பெண் ஆசிரியர்களும் நீங்கள் குறிப்பிடுவது போல் இல்லை' என்கிற சிலரின் 'மைண்ட் வாய்ஸ்' கேட்கத்தான் செய்கிறது. ஆனாலும் உங்களால் மேற்சொல்லப்பட்டவைகள் இல்லவே இல்லை என்று மறுக்க முடியாது.
- கபிரியேல் ஆபுத்திரன்.
Courtesy: Savutribhai Pule - 190th Birth anniversary. Art by : Malvika Raj
No comments:
Post a Comment